---Advertisement---

இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் – ஆட்டோ ஓட்டுனரின் காம லீலை

By Sri
Published on: September 26, 2019
girl
---Advertisement---

கல்லூரி பெண்கள் முதல் பல பெண்களை மிரட்டி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாதகாரம் செய்து வந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ். இவர் ஒரு கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். மோகன்ராஜ் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஆனால் இவரின் வக்கிர காமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் இருவருமே சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

மோகன்ராஜ் காக்காபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் மீது சமீபத்தில் ஒரு இளம்பெண் புகார் கொடுத்தார். அதில், தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்து வருவதாக அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவரது செல்போனை ஆராய்ந்தபோது அதில் ஏழு பெண்களை அவர் மிரட்டியும் தாக்கியும் பலவந்தமாக அடித்து உதைத்து அவர் உல்லாசம் அனுபவிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

rape

கோவை, ஈரோடு, பவானி மற்றும் சேலத்திலிருந்து காக்காபாளையம் இளம்பிள்ளை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு நள்ளிரவில் பஸ்வசதி கிடையாது. எனவே ஆட்டோக்களிலேயே பயணிக்க வேண்டும். இதை பயன்படுத்தி தனது ஆட்டோவில் வரும் கல்லூரி மாணவிகளிடம் பேச்சு கொடுக்கும் மோகன்ராஜ் அவர்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து, நட்புடன் பழகுவார். இனிக்க இனிக்க பேசி நெருக்கமாகி விடுவார். அதில் மயங்கும் பெண்களை வீட்டுக்கு வரழழைத்து பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்து அதை காட்டி மிரட்டி தொடர்ந்து தனது காம இச்சைக்கு அவர்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் சிலரை அவரின் நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார்.

இவரின் சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 40க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோகன்ராஜ் வேட்டையாடியது தற்போது தெரிய வந்துள்ளது. அதில் சில பெண்கள் சேலத்தை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. தற்போது ஒரு பெண் கொடுத்த புகாரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு அவரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மோகன்ராஜ் கைது செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தலைமறைவாகி விட்டனர். இவரைப்போலவே இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த இவரது நண்பர் 2 நாட்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே அவர் எத்தனை பெண்களை நாசம் செய்துள்ளார் என்பது தெரியவரும். இந்த விவகாரம் சேலம் காக்காபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.