---Advertisement---

தாலி கட்டும் சமயத்தில் மாயமான காதலன்… போராட்டம் நடத்தும் காதலி… நடந்தது என்ன…?

By Sri
Published on: October 1, 2024
---Advertisement---

தாலி கட்டும் நேரத்தில் காதலன் மாயமானதை தொடர்ந்து காதலி காதலனை திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டையை சேர்ந்த நபர் கோவிந்தசாமி. இவரின் மகன் ஸ்ரீதர் பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த முருகேசன் என்பவரின் மகள் அனுசியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கிறார்கள்.

இதையடுத்து இரு குடும்பத்தினருடன் இணைந்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருத்தணியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கடந்த 15ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாலி கட்டும் சமயத்தில் மணமகன் ஸ்ரீதர் திருமண மண்டபத்தில் இருந்து மாயமானார். இந்த சம்பவம் மணமகள் வீட்டார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஜாதியை காரணம் காட்டி மணமகன் ஸ்ரீதர் தப்பி ஓடிவிட்டதாக அனுசுயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் மாயமான ஸ்ரீதரை தொடர்ந்து தேடி வந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தங்கி இருந்த ஸ்ரீதரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். டிஎஸ்பி கந்தன் முன்னிலையில் ஸ்ரீதர் மற்றும் அனுசியாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்பாதித்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அனுசியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத ஸ்ரீதர் மறுநாளே மீண்டும் தப்பி ஓடி விட்டார். இதை அடுத்து அனுசியா நேற்று மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் வந்து தனக்கு நீதி வேண்டும் என்று கூறி போராடி வருகின்றார்.

காதலனுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மறுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். காதலனை திருமணம் செய்வதற்கு 16 நாட்களாக அந்தப் பெண் போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Rathna Kumar emotional statement after the massive global success of 29 movie on Netflix OTT.

Emotional Healing Wave: “தியேட்டர்களில் மிஸ் பண்ணதுக்கு சாரி!”… நெட்ஃபிளிக்ஸ் ரிலீசுக்கு பின் ’29’ படத்திற்கு குவியும் உலகளாவிய பாராட்டு! ரசிகர்களின் எமோஷனல் கடிதங்களால் உருகிய ரத்னகுமார்!

Actor Jiiva in a rural politician avatar amid rumors of Super Good Films planning Thalaivar Thambi Thalaimayil 2 as their 100th landmark movie.

Milestone Century Choice: “100-வது படத்திற்கு தரமான பிளான்!”… ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில் 2’! கோலிவுட்டை அதிர வைக்கும் மெகா அறிவிப்பு!

Actor Vijay Antony speaking emotionally about director Sasi at the promotional event of their upcoming movie Nooru Saami.

Nostalgia & Emotion Mix: “என் வாழ்க்கையின் 3 முக்கிய மைல்கற்கள்!”… ‘நூறு சாமி’ மேடையில் இயக்குநர் சசி குறித்து நெகிழ்ந்து உருகிய விஜய் ஆண்டனி! குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

South Indian superstar Ajith Kumar posing in a stylish look amid rumors of salary reduction for his upcoming movies.

Market Crisis Effect: “ரூ.163 கோடியிலிருந்து ரூ.90 கோடியா?”… சம்பள விஷயத்தில் இறங்கி வந்த அஜித் குமார்? அடுத்த பட அறிவிப்பு தாமதமாவதற்கு இதுதான் காரணமா? கோலிவுட்டில் பரவும் ஹாட் நியூஸ்!

Director Anil Ravipudi and music director GV Prakash Kumar in a funny beach concept video for VenkyAnil5 movie announcement.

The Ultimate Fun Mix: “கடற்கரை மணலில் கழுத்து வரை புதைந்த ஜிவி பிரகாஷ்!”… வெங்கடேஷ் – கல்யாண் ராம் இணையும் மெகா மல்டிஸ்டாரர்! அனில் ரவிபுடி படத்தில் கலகலப்பான அப்டேட்!

Evergreen Tamil actress Simran with her elder son Adheep and husband Deepak Bagga celebrating his birthday.

Mother’s Pure Love: “என் கையை பிடிச்ச குட்டி கைகள்.. இன்னைக்கு உலகத்தையே ஆள ரெடி ஆயிடுச்சு!”… மூத்த மகன் அதீப் பிறந்தநாளுக்கு உருகிய சிம்ரன்! வைரலாகும் எமோஷனல் பதிவு!