தமிழ் திரையுலகின் ‘புன்னகை அரசி’ சினேகா (Sneha) மற்றும் திறமையான நடிகர் பிரசன்னா (Prasanna) இருவரும் இன்று தங்களது 14-வது திருமண நாளை (Wedding Anniversary) கொண்டாடுகின்றனர். 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த நட்சத்திர தம்பதி, இன்றுவரை கோலிவுட்டின் ‘பெஸ்ட் கப்பிள்’ ஆகத் திகழ்ந்து வருகின்றனர்.
இந்த விசேஷ நாளை முன்னிட்டு நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான, அதே சமயம் சுவாரஸ்யமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு மகிழ்ச்சி, சவால், சிரிப்பு மற்றும் கண்ணீர் என அனைத்து தருணங்களிலும் கடந்த 14 ஆண்டுகளாகக் கைகோர்த்து பயணித்து வருகிறோம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று, கடினமான நாட்களைக் கடந்து, அழகான தருணங்களைக் கொண்டாடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு நாளும் உன்னையே தேர்ந்தெடுக்கிறேன்”
சினேகாவின் இந்த அழகான பதிவில் ஒரு குறும்புத்தனமான கருத்தும் இடம் பெற்றுள்ளது. “உண்மையைச் சொல்லப்போனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவருக்கொருவர் குணங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் சின்னச் சின்னச் சண்டைகளைச் சகித்துக் கொண்டு வாழ்வதுதான் மிகப்பெரிய காதல் கதை” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும், “விளையாட்டுகளைத் தாண்டி, நம்மிடையே இருப்பது அன்பு, பொறுமை மற்றும் புரிதலால் கட்டப்பட்ட ஒரு அழகான பந்தம். இன்னும் பல ஆண்டுகள் இதேபோல் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டும், அன்பைப் பகிர்ந்து கொண்டும் வாழ வேண்டும்” எனத் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
திரையில் மலர்ந்த காதல்
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது சினேகா மற்றும் பிரசன்னா இடையே காதல் மலர்ந்தது. நீண்ட காலக் காதலுக்குப் பிறகு பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
தற்போது சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரத்தைச் செலவிடுவதைத் தவறவிடுவதில்லை. இவர்களது 14-வது திருமண நாளுக்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.













