---Advertisement---

நீங்க என்ன பண்ணாலும் சரி… எங்களுக்கு பழசு தான் வேணும்… விடாப்பிடியாக நிற்கும் தமிழகஅரசு ஊழியர்கள்…!

By Sri
Published on: August 29, 2024
---Advertisement---

மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த போதிலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று அரசு அலுவலர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த 24ஆம் தேதி அமல்படுத்துவதற்கு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட சராசரி அடிப்படையில் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.

முழு ஓய்வூதிய பெறுவதற்காகன  தகுதியான பணிக்காலம் 25 ஆண்டுகள் ஆகும். 25 ஆண்டுகளுக்கும் குறைவாக அரசுப்பணியில் இருப்பவர்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும் ஓய்வூதிய தொகை விகிதசராசரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும் மத்திய அரசு பங்களிப்பு 14 சதவீதமும் இருக்கின்றது.

ஆனால் மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி 18 சதவீதமாக அது உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை அறிவுறுத்தி இருக்கின்றது.

எங்களுக்கு பழைய ஓய்வூதிய தட்டம் தான் வேண்டும் என்று நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை வரவேற்கின்றோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்காது.

கடந்து 2003 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் தமிழக அரசு இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் எந்த பிரச்சினையும் எழாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Producer KJR Rajesh sharing updates about Lady Superstar Nayanthara's Aramm movie shooting days and Aramm 2 script readiness.

வெறும் 12 நாளில் நயன்தாரா முடித்துக் கொடுத்த மாஸ் ஹிட் படம்; ‘அறம் 2’ எப்போது? தயாரிப்பாளர் அசாத்திய உடைத்த ரகசியம்!

Actor Jai opening up about his career break and the growth of actors Sivakarthikeyan and Vijay Sethupathi in Kollywood.

“அந்த கேப்பில் தான் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ள வந்தாங்க…” மாஸ் வெற்றிக்கு பின் செய்த தப்பை ஒப்புக்கொண்ட ஜெய்!

Actor Arya in lead role for Ananthan Kaadu movie, a Tamil-Malayalam bilingual political action drama directed by Jiyen Krishnakumar releasing on June 25.

“ஏறக்குறைய ஒரு உண்மைச் கதை…” திரையரங்குகளை அதிரவைக்க வரும் ஆர்யாவின் மெகா பொலிட்டிக்கல் ஆக்ஷன் படம்!

Actor Abishan Jeevinth facing the camera for his official first shot alongside legendary Kannada actor Shiva Rajkumar on the sets of Drama Company Production No 1.

கேப்டன் மில்லரைத் தொடர்ந்து தமிழில் சிவராஜ்குமாரின் அதிரடி ஆட்டம்; பூஜையுடன் துவங்கிய புதிய மெகா மூவி!

Warner Bros India announcing The End of Oak Street movie release in IMAX and theaters for August 2026 in English, Tamil, Telugu, and Hindi.

திரையரங்குகளை அதிரவைக்க வரும் வார்னர் பிரதர்ஸின் மெகா படம்… தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த அசாத்திய சர்ப்ரைஸ்!

Actress Janhvi Kapoor sharing her appreciation for Tollywood work culture and discipline on movie sets.

மதிய உணவு இடைவேளையில் குட்டித் தூக்கம்… தெலுங்கு படப்பிடிப்பு தளங்களின் ரகசியத்தை உடைத்த ஜான்வி கபூர்!