தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதனால் இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரமும் பெரும் சரிவில் உள்ளது.
இதனை தொடர்ந்து, மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கொரொனா நிதி உதவியாக தங்களால் முடிந்தை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து திரைப் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பணமாகவோ, பொருளாகவோ அரசுக்கு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், பிரபல நிறுவனம் தமிழகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பிலான பிசிஆர் கருவிகளை அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 பி.சி.ஆர். கருவிகளை வழங்கியது டாடா நிறுவனம். இதனையடுத்து, கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பிசிஆர் கருவிகளை வழங்கியதற்காக டாடா நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.







