தமிழகத்தில் கொரொனா பரவாமல் தடுக்க தமிழக அரசு ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் ஊரடங்கு உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக கூறியிருந்தார்.
இதனை அடுத்து, தமிழக அரசு கொரொனா தொற்று பரவாமல் தடுக்க, சமூக இடைவெளி, சுய தனிமைப்படுத்தல், வீட்டிலேயே இருத்தல், என முன்னெச்சரிக்கை வாசகங்களை முன்மொழிந்து வந்தது. என்னதான் கொரொனா தாக்கம் இருந்தாலும், அதனை எண்ணி பயப்படாமல் மக்களுக்காக மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை நம்மை நோயிலிருந்து காப்பாற்ற அன்றாடும் தங்களை அறப்பணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தூய்மைப் பணியாளர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தியது மிகவும் நிகழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.








