பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நேற்று மரணம் அடைந்தார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 52 நாட்களாக உடல் நலிவுற்று இருந்தார். நுரையீரல் செயல்பாடுகள் மோசமானதால் நேற்று எஸ்.பி.பி உயிரிழந்தார்.
அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.பி குறித்து வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தெனாலி படத்தில் அவர் பாடிய பாடல் குறித்து சுவாரஸ்யமான விசயத்தை பகி்ர்ந்துள்ளார்.
தெலுங்கு அவருக்கு தாய்மொழியாக இருந்தாலும் தமிழ் மேல் மிகுந்த பற்று வைத்திருந்தார். ‘தெனாலி’ படத்தின் போது ஏ.ஆர்.ரஹ்மானும் இசைக்கூடத்தில் இருந்தோம். அப்போது அவர் கண்ணாடி…. (கண்ணாடி என்றதும் இப்போ அவர் கண்ணாடி பெட்டிக்குள்ள இருக்குறது நியாபகம் வந்துடுச்சு. இது ஒரு கனவா இருக்கக்கூடாதா ? என்று கண்கலங்கினார். ) பாடல் குறித்து இந்த வரிகளை இன்னும் அழுத்தமாக பாட முடியுமா என்று கேட்ட போது, ‘ரவிக்குமார் சார் உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி பாடிக் கொடுத்துடுறேன்’ என்றார்.







