தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இயக்கத்தாலும், வித்தியாசமான கத களங்களாலும் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வந்த நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் (Parthiban), தற்போது தனது சினிமா பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி தான் பரிசோதனை முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, முழுக்க முழுக்க வணிக ரீதியான (Commercial) திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ஹவுஸ்ஃபுல் (Housefull) திரைப்படம் இன்று வெளியாகி இருந்தா நன்றாக ஓடியிருக்கும். இப்படத்தில் சியான் விக்ரம் இள வயது கதாபாத்திரத்திலும், நான் முதிய வயது கதாபாத்திரத்திலும் நடித்திருந்தோம். அந்தக் காலகட்டத்தில் எனக்கு இருந்த மக்கள் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இரண்டு கதாபாத்திரங்களிலும் நானே நடித்திருந்தால் படம் மிகப்பெரிய ஹிட்டாகியிருக்கும் என்று பலரும் என்னிடம் கூறினர். ஆனால், இரட்டை வேடக் கதாபாத்திரம் என்ப காரணத்தினாலேயே நான் ‘நாட்டாமை’ போன்ற பெரிய படங்களைக் கூட நிராகரித்துள்ளேன்” என்று அவர் வியப்புக்குரிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ‘உள்ளே வெளியே 2’ (Ulle Velliyae 2) மற்றும் ‘புதிய பாதை 2’ (Pudhiya Pathai 2) போன்ற கமர்சியல் இரண்டாம் பாகப் படங்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்தப் புதிய முடிவு அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.













