---Advertisement---

ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்த புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்…!

By Sri
Published on: August 22, 2024
---Advertisement---

தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

இதனால் தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து தமிழக அரசின் ஐம்பதாவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று முருகானந்தம் சந்தித்து பேசி இருக்கின்றார். மேலும் அவரிடம் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கின்றார். அப்போது தலைமைச் செயலாளருடன் பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.