பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் மாணவனை கண்முடித்தனமாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பல மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை கொடுமையாக தாக்கும் வீடியோவானது வைரலானது. இதையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். அகமதாபாத் வதுவாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த ஆசிரியரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றார்.
அந்த வீடியோவில் மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் நிலையில் கோவமாக வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி தலையைப் பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகளானது இடம்பெற்றிருக்கின்றது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றிருக்கின்றது.
இது வகுப்பறையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த ஆசிரியரை பலரும் கண்டபடி திட்டி வந்தார்கள். இதையடுத்து போலீசார் பட்டேலை கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றார்.