தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும், அதன் தொடர்ச்சியான விவகாரங்களும் தொடர்ந்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி ரவி பகிர்ந்துள்ள ஸ்டோரியில், முன்னணி நடிகர்களான சூர்யா, அஜித், விக்ரம் மற்றும் கமல் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு… ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்டா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் நேரடியாக யாரையும் அவர் பெயரிட்டு அழைக்கவில்லை என்றாலும், இதன் தற்போதைய சூழல் மற்றும் நேரத்தைக் கருத்தில் கொண்டு பலரும் இது நடிகர் ரவி மோகனைத்தான் குறிக்கிறது என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சட்டப் போராட்டங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய பதிவுகள் இணையவாதிகள் மத்தியில் தொடர் விவாதப் பொருளாக மாறிவருகின்றன.













