திருமணத்தில் டிஜே பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தற்போது திருமண கலாச்சாரம் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருமணம் என்றால் ஒரு நாள் என்பது தாண்டி தற்போது ஒரு வாரம் திருவிழா போல திருமணத்தை கொண்டாடி வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டிஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான் பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமணத்தில் பாடல் ஒழிக்கப்பட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. தான் மேடைக்கு வரும்போது குறிப்பிடப் பாடலை இசை அமைக்க வேண்டும் என்று மணப்பெண் விரும்பி கேட்டு இருக்கின்றார். ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் தரப்பு தங்களுக்கு பிடித்த பாடல்களை தான் நாங்கள் ஒளிபரப்புவோம் என்று கூறி இருக்கிறார்கள்.
இதனால் இரு வீட்டருக்கும் இடையே வாக்குவாதம் இருந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இருதரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். ஆனால் மாப்பிள்ளை வீட்டு சார்பில் திருமணத்திற்கு வந்த விருந்தினர் ஒருவர் மீண்டும் பெண் வீட்டாருடன் சண்டைக்கு சென்று இருக்கின்றார்.
பெண் வீட்டு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும் போது வழிமறித்து அவரை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார். அவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.