சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தாலும், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று நாளை ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் பார்த்து வாழ்த்து சொன்னார் கமல்.
இந்நிலையில் இவரின் வித்தியாசமான கோரிக்கை என்னவென்றால் அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை. கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும் என கமல் கருத்து கூறியுள்ளார்.
அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை.
கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். pic.twitter.com/P5gzMW4G0Q— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2021













