கோலிவுட்டில் கடந்த ஆண்டு ‘டூரிஸ்ட் பேமிலி’ எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் அபீஷன். சமீபத்தில் ‘வித் லவ்’ படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்த இவர், தற்போது மீண்டும் மெகா பட்ஜெட் படங்களை இயக்கத் தயாராகி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவுக்கு அபீஷன் ஒரு கதையைச் சொல்ல, அது அவருக்குப் பிடித்துப் போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தேவரகொண்டா தற்போது தனது அடுத்தடுத்த படங்களுக்காகத் தரமான கதைகளைத் தேடி வரும் நிலையில், அபீஷனின் மேக்கிங் ஸ்டைல் அவருக்குப் பெரிதும் பிடித்துள்ளதாம். இந்தப் படம் அபீஷனின் அடுத்த மிகப்பெரிய இயக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு எமோஷனல் ஆக்ஷன் கலந்த கமர்சியல் என்டர்டெய்னராக உருவாக வாய்ப்புள்ளதாகக் கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா மட்டுமின்றி தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யாவையும் அபீஷன் குறிவைத்துள்ளார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் ஒரு கதையைச் சொல்லி ஓகே வாங்கியுள்ள அபீஷன், விரைவில் நடிகர் சூர்யாவையும் சந்தித்துக் கதை சொல்லத் திட்டமிட்டுள்ளார். வெறும் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் 90 கோடிக்கும் மேல் வசூலித்ததால், பெரிய ஹீரோக்கள் பலரும் அபீஷனின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவரது திரைக்கதை அமைக்கும் விதம் உலக நாயகன் கமல்ஹாசன் பாணியில் இருப்பதாகப் பலரும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் தேவரகொண்டா படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்க அபீஷன் திட்டமிட்டு வருவது அவரது அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தப் படங்கள் அனைத்தும் பான்-இந்தியா லெவலில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே ஆண்டில் இயக்குநர் மற்றும் நடிகர் என இரண்டு துறைகளிலும் முத்திரை பதித்த அபீஷனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய டாப் டாக்.













