சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போ ‘ஜெயிலர் 2’ மற்றும் ‘KHxRK’ பட வேலைகள்ல பிஸியா இருந்தாலும், அவரோட அடுத்தடுத்த படங்கள் பத்தின எதிர்பார்ப்பு கோலிவுட்ல என்னைக்குமே குறையறது இல்லை. அந்த வகையில கமல்ஹாசனின் ஆர்.கே.எஃப்.ஐ (RKFI) தயாரிப்புல ரஜினி நடிக்கப்போற ‘தலைவர் 173’ படம் தான் இப்போ ஹாட் டாபிக். இந்தப் படத்தை ‘டான்’ புகழ் சிபி சக்ரவர்த்தி தான் இயக்கப்போறாருன்னு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலைமையில, இப்போ ஒரு புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை குழப்பத்துல ஆழ்த்திருக்கு.
சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்துல இருந்து விலகிட்டு அவருக்கு பதிலா ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ பட புகழ் அஷ்வத் மாரிமுத்து உள்ள வர்றதா ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு. இது பத்தி அஷ்வத் மாரிமுத்து சமீபத்துல குடுத்த ஒரு பேட்டியில ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்லிருக்காரு. ரஜினி சாருக்கு அவர் ஒரு கதை சொன்னப்போ, இடைவேளைக் காட்சி (Interval Block) அவருக்கு ரொம்ப பிடிச்சுப்போனதாகவும், அந்த கதையை முழுசா கேட்டு முடிக்கணும்ன்ற ஆர்வத்துல ரஜினி சார் மதிய சாப்பாட்டையே தள்ளி வெச்சுட்டதாகவும் சொல்லிருக்காரு.

முதல்ல இந்தப் படத்தோட ஷூட்டிங் ஏப்ரல் கடைசி வாரத்துல சிபி சக்ரவர்த்தி இயக்கத்துல ஆரம்பிக்கிறதா இருந்துச்சு. ஆனா இப்போ டைரக்டர் மாற்றப்படுறதா வர்ற ரூமர்ஸ் கோலிவுட் வட்டாரத்துல ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு. அஷ்வத் மாரிமுத்து இப்போ சிம்புவோட ‘எஸ்டிஆர் 51’ படத்துல பிஸியா இருந்தாலும், ரஜினி படத்துக்கான வாய்ப்பு வந்தா அதை விடமாட்டாருன்னு எதிர்பார்க்கப்படுது. சிபி சக்ரவர்த்தியா இல்ல அஷ்வத் மாரிமுத்துவான்ற சஸ்பென்ஸ் இன்னும் சில நாட்கள்ல தெரிஞ்சுடும்.
ஆர்.கே.எஃப்.ஐ நிறுவனம் தரப்புல இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தா மட்டும் தான் இந்த குழப்பத்துக்கு ஒரு முடிவு கிடைக்கும். ரஜினி – கமல் ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற ப்ராஜெக்ட்ன்றதுனால இது ஒரு சாதாரண கமர்ஷியல் படமா இல்லாம ஒரு தரமான மாஸ் படமா இருக்கும்னு எல்லாரும் நம்புறாங்க. இந்த வருஷம் ஜூன் மாசம் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் ஆன அப்புறம் ‘தலைவர் 173’ ஷூட்டிங் சூடுபிடிக்கும்னு சொல்லப்படுது. அதுவரைக்கும் இந்த டைரக்டர் ரேஸ்ல யார் ஜெயிக்கப்போறாங்கன்னு வெயிட் பண்ணி தான் பார்க்கணும்.
ரஜினி சாருக்கு அஷ்வத் மாரிமுத்து சொன்ன அந்த கதை இப்போ தலைவர் 173 படத்துக்கான கதையா இருக்குமோன்னு ரசிகர்கள் கெஸ் பண்ணிட்டு இருக்காங்க.













