தமிழ் சினிமாவில் எப்போதுமே தங்களது படங்களின் அறிவிப்புகள் மூலமாகவும், அதிரடி அப்டேட்டுகள் மூலமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தான் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். இவர்களது தயாரிப்பில், ஓ மை கடவுளே பட புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், நம்ம எஸ்டிஆர் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போ இந்த படம் பத்தின ஒரு முக்கியமான செய்தி இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
சமீப நாட்களாக சோசியல் மீடியா பக்கங்களில் சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணையும் இந்த புதிய திரைப்படம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு விட்டதாக சில வதந்திகள் மற்றும் செய்திகள் பரவத் தொடங்கின. இதனால் சிம்புவின் ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்திற்குப் படக்குழு தரப்பில் இருந்தே தற்பொழுது ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கம் கிடைத்துள்ளது.
அப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் இதுபற்றி நேரடியாகப் பேசியுள்ளார். சிம்பு நடிக்கும் இந்த படம் ஒத்திவைக்கப்படவில்லை என்று அவர் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், படத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இன்னும் இந்த படத்திற்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தான் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்த திரைக்கதை வேலைகள் முடிந்தவுடன், படத்தின் அடுத்தகட்ட வேலைகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் தள்ளிப்போய்விட்டது என்று கிளம்பிய வதந்திகளுக்குத் தயாரிப்பாளரே நேரிடையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதால், சிம்புவின் ரசிகர்கள் தற்பொழுது நிம்மதியும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.













