---Advertisement---

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் பலியா ? அதிர்ச்சியளிக்கும் தகவல் !

By Sri
Published on: March 9, 2020
---Advertisement---

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் முதன் முதலாக ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 40 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக ஈரான் நாட்டிலிருந்து லடாக் திரும்பிய 76 வயது இந்தியர் ஒருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அவர் கொரோனா வைரஸால் இறந்ததாக இன்னும் அரசு உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுபற்றி அப்பகுதி மக்கள் பீதியில் உள்ள நிலையில் அவரது மரணம் பற்றி பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. ஒருவேளை அவர் கொரோனாவால் உயிரிழந்தார் என நிரூபிக்கப்பட்டால் அதுதான் இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் பலியாக இருக்கும்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க