கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அரசுக்கு பல்வேறு அமைப்புகளும் வெளிநாடுகளும் நிதி உதவியும் மற்ற உதவிகளும் செய்து வருகிறது.
பிரபல சேட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தனது பங்காக 30 கோடியை ஒதுக்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் முன்னெடுப்புகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படும்.
இந்திய அரசும், மாநில அரசுகளும் ஆரம்பித்திருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட விஷயங்களைத் தரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்தும் இந்தப் பணம் செலவிடப்பட்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







