சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் தந்தை கண் முன்னே மகன் சிக்கி பலியாகியுள்ளார் இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த தனது தாயை அழைத்து வர ஸ்ரீதர் என்பவரும் அவரது தந்தை சுப்புராஜ் என்பவரும் ரயில் நிலையம் செல்ல இரு வேறு பைக்குகளில் சென்றுள்ளனர்.
திடீரென சாலையில் நிலை தடுமாறி விழுந்த மகன் ஸ்ரீதர் தன் தந்தை கண் முன்னாலேயே பின்னால் வந்த பஸ் மோதி பலியானார்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசி டிவியில் பதிவாகியுள்ளது.













