---Advertisement---

விலங்குகளை துன்புறுத்தினால் இனி அவ்ளோதான்

Published on: October 5, 2021
---Advertisement---

விலங்குகளைத் துன்புறுத்தினால் கடும் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும், இதற்கான வரைவு மசோதா அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உலக விலங்குகள் தினத்தையொட்டி, டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள காமதேனு கோசாலையில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய கால்நடைப் பராமரிப்பு , மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியின் இடையே மத்திய அமைச்சர் ரூபாபாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ விலங்குகளை துன்புறுத்துபவர்களுக்கு முதல்முறையாக தவறு செய்தால்கூட கடும் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளோம். மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கூட்டத்தொடரில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்

தற்போதுள்ள சட்டத்தின்படி, விலங்குகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுத்தி, துன்புறத்தி முதல்முறையாக சிக்கினால், ரூ.50 மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. இதைத் திருத்தி மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் ஓ.பி. சவுத்ரி நிகழ்ச்சியில் பேசியதாவது:

“விலங்குகளை துன்புறுத்தி முதல்முறையாக சிக்குவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த ஆலோசித்து வருகிறோம், அதுமட்டுமல்லாமல் முதலமுறையாக தவறு செய்தாலே சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் செய்யவிருக்கிறோம்.

 

மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கூட்டத்தொடரில் வரைவு மசோதா தாக்கலாகும். விலங்குகளை திரைப்படங்களுக்கு பயன்படுத்த அனுமதி பெற தனியாக போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

நகர்புறங்களில் அடுக்குமாடி வீடுகளில் குடியிருப்போர் பசுக்களை வளர்க்க முடியாத சூழல் இருக்கிறது. ஆனால், பசுக்களை வளர்க்க விருப்பம் இருப்போருக்கு தனியாக பசு விடுதி (கவ் ஹாஸ்டல்) தொடங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பசுக்களை வாங்கி இங்கு பராமரித்து வளர்க்கலாம். இதற்குதேவையான உதவிகளை அரசு வழங்கும்.

சமீபகாலமாக கோசாலைகளுக்கு வரும் நிதியுதவி குறைந்துள்ளது. இதை அதிகப்படுத்த தேவையான விழிப்புணர்வும், ஊக்கமும் மக்களுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஒரே வழி, பசு வளர்ப்புதான். ஆதலால், தீபாவளி, தசரா போன்ற பண்டிகை நாட்களில் பசு தொடர்பான பால் பொருட்களில் செய்த உணவுகளை அதிகமாக வாங்கியும், ஆதரவு கொடுத்தும் விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும்.

இவ்வாறு சவுத்ரி தெரிவித்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!