கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இப்பொழுது இந்தியாவிலும் நுழைந்து தன் மரண வேட்டையை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா குறித்த சுகாதார பணிகளை மிகவும் சாதுரியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் இச்செயல் பல்வேறு தரப்பினர்களிலிருந்தும் பாராட்டப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திரைபிரபலங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
நேற்றைய தினம், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்தார். அமைச்சரை சந்திக்க செல்லும்போது மலர்ச்செண்டு எதுவும் எடுத்துச் செல்லாமல் 5 லிட்டர் சானிடைசர்ரை அன்பளிப்பாக கொடுத்தார். மக்களின் சார்பாக வழங்கினார் என்றும் கூடுதலாக மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்களை பயன்படுத்தலாம் என்றும் விஜயபாஸ்கர் அவர்களுக்கு தன் தரப்பு யோசனையை கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” pic.twitter.com/mtp2x3GLTD
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 25, 2020
மக்களின் சார்பில் வழங்கினேன்.இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்கு திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமென கருத்துத் தெரிவித்தேன் அந்த யோசனையை கருத்தில் கொண்டு செயல் பட செய்கிறேன் என்றார். pic.twitter.com/TANFXn8vKf
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 25, 2020
எப்பொழுதும் வித்தியாசத்திற்கு பெயர்போன நடிகர் பார்த்திபன் தனது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி தற்போது சுழலுக்குகேற்ப சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரருக்கு சானிடைசர் வழங்கியது பெரும் வைரல் ஆகியுள்ளது.







