---Advertisement---

நடிகர் அக்க்ஷய் குமாரின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

By Sri
Published on: March 30, 2020
Akshay-Kumar
---Advertisement---

கொரோனா தொற்று காரணமாக இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நிதி நெருக்கடியை உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தொகை மிகவும் அதிகமாக கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில்தான் குறிப்பாக சொல்லப்போனால் அன்றாட வாழ்வுக்கே போராடும் தினக்கூலிகளும் அதிகம். இதனால் கொரோனா தடுப்பு நிதியாக இந்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சீர் செய்யும் விதமாக தங்களால் முடிந்த நன்கொடைகளை தருமாறு மக்களிடம் மாநில அரசும், மத்திய அரசும் கேட்டுக்கொண்டு வருகிறது.

ஏழைகள் சூழ்ந்த இந்தியாவில் பணக்காரர்களும் கொஞ்சம் அதிகம்தான். என்னதான் பணம் இருந்தாலும் அதுவும் கோடிகணக்கில் பணம் இருந்தாலும் அதை அள்ளிக் கொடுக்க மனம் வேண்டும். அது போன்று பிரதமர் மோடிக்கு சற்றும் எதிர்பாராத விதமாக பெரும் தொகையை வாரி வழங்கயுள்ளார், பிரபல பாலிவுட் நடிகரான அக்க்ஷய். இவர் இந்த இவ்வளவு பெரிய தொகையை கொடுப்பார் என்று எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ரூபாய் 25 கோடியை பிரதமர் மோடியின் PM-CARES FUNDக்கு நன்கொடையாக தனது சேமிப்பில் இருந்து வழங்கயுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அக்க்ஷய் குமாரின் இந்த செயல் ரசிகர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களையும் மிகவும் பிரமிப்பு அடைய செய்துள்ளது.

இன்னும் சில ரசிகர்கள் இவர் மிகவும் அமைதியான முறையில் பல்வேறு மக்களுக்கு நிதி உதவி செய்து கொண்டுதான் வருகிறார் அது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை என்றும் கூறுகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க