கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் பாடகர் எஸ்.பி,பி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக சொல்லப்பட்டது. கொரோனா ட்ரீட்மெண்ட்டுக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன் அமைதியாக பேசி ட்ரீட்மெண்ட்டுக்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு சாதாரணமாகத்தான் சென்றார். ஆனால் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் செய்திகள் வந்து கொண்டு இருந்தன.
இதற்கிடையே ரசிகர்கள் பலர் கடுமையான கூட்டு பிரார்த்தனை செய்த நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக சொல்லப்பட்டது கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அவரது உடல்நிலை பற்றி பாஸிட்டிவான தகவல்களே வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு மருத்துவம் பார்க்கும் எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக இல்லை. உச்சகட்டமாக உயிர்காக்கும் கருவிகளை வைத்து அவரது உயிர் காக்க போராடி வருகிறோம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.









