தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash) நடித்துள்ள புதிய திரைப்படமான ‘இம்மார்டல்’ (Immortal) குறித்த பல சுவாரஸ்ியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டு பல அரிய உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார்.
படம் குறித்துப் பேசிய அவரிடம், “இப்படம் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை என்று கூறினீர்களே, அது எப்படி?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அந்தக் கதாபாத்திரம் படத்தில் வருகிறது. அவங்களுக்கு சாவே கிடையாது, அதனால்தான் இப்படத்திற்கு ‘இம்மார்டல்’ எனப் பெயரிட்டோம். முதல்ல இப்படத்திற்கு ‘சாகவரம்’ (Saagavaram) என்றுதான் தலைப்பு இருந்தது. அப்புறம் சாம் லோகேஷ் தான், ‘இது Pan India அளவிலான படம், அதனால் ‘Immortal’ என்று வைக்கலாம்’ என்றார்” எனத் தெரிவித்தார்.
#immortal trailer is here pic.twitter.com/pubYbS8DPo
— G.V.Prakash Kumar (@gvprakash) August 26, 2026
மேலும் தொடர்ந்த அவர், “இது இந்திய சினிமாவுக்கே ஒரு முற்றிலும் புதிய ஜானர்; இதுவொரு வாம்பயர் (Vampire) படம். ஆரம்பத்தில் இப்படத்தின் டைட்டிலாக ‘சாகவரம்’ என்றுதான் வைத்திருந்தோம். படத்தில் கிரியேச்சர்கள் மற்றும் மான்ஸ்டர்களை உருவாக்குவதற்காக மட்டும் சி.ஜி (CG) பணிகளுக்காக ஒரு வருடம் காத்திருந்தோம். இதன் நரேஷனைக் கேட்கும்போதே ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது. இது ஏதாவது ஹாலிவுட் படத்தின் காப்பியா என்று கூட நான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் இது எந்தக் படத்தின் காப்பியும் அல்ல, ஒரு முற்றிலும் புதிய முயற்சி. ரசிகர்களுக்கு இது ஒரு திரையரங்க அனுபவமாக இருக்கும்” என உற்சாகத்துடன் கூறினார்.













