---Advertisement---

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

By Sri
Published on: October 9, 2024
---Advertisement---

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது.

பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி திட்டத்தின் வாயிலாக வழங்கி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நான்கு கட்டங்களாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதாவது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கல்வித்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த நிதி செலவு செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் முன்மொழியப்படும் மொத்த நிதியில் மத்திய அரசு சார்பில் 60% மாநில அரசு சார்பில், 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் மத்திய அரசு 2,152 கோடியை தன் பங்கு நிதியாக வழங்குவதற்கு முன்மொழிந்து இருந்தது. அதில் முதல் கட்ட நிதியாக 573 கோடியை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் தற்போது வரை முதல் கட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு இணைவதற்கு ஒப்புக் கொள்ளாத காரணத்தால் அந்த நிதியை நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தது. பி எம் ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கை இருப்பதால் அதை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. ‘2024 25 ஆம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷா அபியான் நிதியை வழங்க சில நிர்வாக அனுமதி பெற வேண்டி உள்ளது. அந்த நிர்வாக செயல்முறைகள் முடிந்ததும் எப்போது நிதி ஒதுக்கப்படும் என்கின்ற விவரம் தெரிவிக்கப்படும்’ என மத்திய அரசு சார்பாக விளக்கம் கொடுத்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official trailer launch banner of legendary director Singeetam Srinivasa Rao's upcoming movie Sing Geetham.

மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பு!.. மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியுள்ள ‘சிங் கீதம்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியீடு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட விசுவல்ஸ்!

Official release date announcement poster of Actor Karthi's spy action thriller Sardar 2 directed by PS Mithran.

“மிஷன் ஆஃப் எ லைஃப்… டைம்!”.. கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட பிரம்மாண்ட ஸ்லைடு.. செப்டம்பர் 10-ல் மிரட்டலாக வரும் ஏஜெண்ட்!

Official announcement title look first look banner of Superstar Rajinikanth's Dharman produced by Kamal Haasan RKFI banner.

“தர்மமே வெல்லும்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வமாக வெளியீடு.. ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட மெகா மாஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Arya sharing official updates about Sarpatta Parambarai 2 shooting timeline during Anantha Kaadu movie press meet.

“கபிலன் மீண்டும் வர்றான்!”.. ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு எப்போது?.. ‘அனந்தன் காடு’ பிரஸ்மீட்டில் ஆர்யா உடைத்த மெகா ரகசியம்.. குத்துச்சண்டை உலகிற்குத் திரும்பும் பா. ரஞ்சித் டீம்!

Official announcement poster of Vikram Prabhu 26th movie presented by Romeo Pictures and composed by Yuvan Shankar Raja.

“காஸ்ட்லியஸ்ட் ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சவுத் இந்தியா!”.. விக்ரம் பிரபுவின் 26-வது படத்திற்குப் போடப்பட்ட மெகா பட்ஜெட் பிளான்.. நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி மியூசிக் ட்ரீட்!

Official announcement poster of Superstar Rajinikanth's Thalaivar 173 produced by Kamal Haasan featuring a blood-stained scalpel knife.

“ரத்தக் கறையோடு களம் இறங்கும் சூப்பர்ஸ்டார்!”.. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியின் ‘தலைவர் 173’ டைட்டில் இன்று வெளியீடு.. கரியரிலேயே முதல்முறையாக ரஜினி எடுக்கும் அந்த புதிய அவதாரம்!