---Advertisement---

இரவு நேர ஊரடங்கு- குஜராத் அரசு அறிவிப்பு

Published on: December 21, 2021
---Advertisement---

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதன் மூலம் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்து வருகிறது.

இதற்கிடையில், தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்  தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதற்கு ‘ஓமிக்ரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் 50 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இதனின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும்  கண்டறியப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில்,  இது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி,இந்தியா  முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிரா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள 8 முக்கிய நகரங்களில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை( நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,அகமதாபாத்,காந்திநகர், சூரத்,ராஜ்கோட்,வதோதரா,பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜுனகர் ஆகிய 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரையிலான இந்த இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அவசர தேவை மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Contemporary Chief Minister of Tamil Nadu Vijay with his mother Shoba Chandrasekar highlighting his political core decisions.

“இல்ல மா.. நான் முடிவு பண்ணிட்டேன்!”.. சினிமா வேணாம்.. முழுநேர அரசியல் தான்.. 2023-லேயே விஜய் எடுத்த அதிரடி முடிவு.. பிரெத்யேக போட்காஸ்ட்டில் தாய் ஷோபா சந்திரசேகர் எமோஷனல் பேட்டி!

Director Sasi officially announcing his next film 100 Kodi Vaanavil following the theatrical blockbusting success of Noorusami.

“அடுத்து ஒரு எமோஷனல் லவ் ஸ்டோரி!”.. ‘நூறுசாமி’ மெகா ஹிட்டுக்கு பிறகு இயக்குநர் சசியின் அடுத்த பிரம்மாண்டம்.. ‘100 கோடி வானவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Actor and producer Vishnu Vishal giving a serious interview regarding his movie Aaryan box office and Mohandas OTT updates.

“அந்தப் படங்களைப் பார்த்துதான் தப்பு பண்ணிட்டேன்!”.. தமிழ் ரசிகர்களுக்குத் தியேட்டரில் பொறுமை இல்லை.. ‘ஆரியன்’ தோல்வியின் உண்மையான காரணத்தைப் போட்டுடைத்த விஷ்ணு விஷால்!

Actor and politician Vijay with his mother Shoba Chandrasekar highlighting the rare facts from her recent viral media interview.

“அவுட்டிங் பிடிக்காது.. ஷாப்பிங் போகவே மாட்டான்!”.. வெளிநாட்டிலும் ரூமிற்குள் அடைந்து கிடக்கும் விஜய்.. தாய் ஷோபா சந்திரசேகர் உடைத்த மெகா ரகசியம்!

Actor Ajith Kumar celebrating Father's Day with his daughter Anoushka Kumar and son Advik Kumar shared officially by Shalini Ajithkumar.

“அப்பாவை மிஞ்சிய உயரத்திற்கு வளர்ந்த பிள்ளைகள்!”.. தந்தை தின ஸ்பெஷலாக அஜித் குமாரின் எமோஷனல் ஃபேமிலி போட்டோ.. இணையவாசிகளை நெகிழ வைத்த ஷாலினி அஜித்குமாரின் கியூட் போஸ்ட்!

Mega Powerstar Ram Charan spending emotional time with his father Megastar Chiranjeevi on the official shooting sets of Mega 158 movie.

“எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அப்பாவுக்கு மகன் தான்!”.. மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ‘மெகா 158’ படப்பிடிப்பு தளத்தில் ராம் சரண்.. தந்தை தின ஸ்பெஷல் வைரல் போட்டோ!