தமிழில் நாடோடிகள், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஜய் வசந்த். இவர் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்த் அண்ட் கோ உரிமையாளரான வசந்தகுமார் அவர்களின் மகன் ஆவார்.
வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியாக இறந்த போதே மறைந்து விட்டார். இதனால் வரும் சட்டசபை தேர்தலோடு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலும் வருகிறது.
இதில் காங்கிரஸ் சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தே போட்டியிடுகிறார். அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, எனது உடலிலும் உயிரிலும் என்றும் கலந்து இருக்கிறார் எனது தந்தை. இந்த போரில் அவர் கற்று தந்த மந்திரங்கள் என்னை வெற்றியின் பாதையில் நடத்தி செல்லும். என கூறியுள்ளார்.













