எழுத்தாளர் இமயம் என்பவர் வாழ்க வாழ்க என்ற கதையை எழுதியுள்ளார். அதில் தொண்டர்கள் வெயிலில் நின்று தனது கட்சி தலைமைக்காக காத்திருக்கும் அவலத்தையும் கோஷம் போடும் விஷயங்களையும் எழுதியுள்ளார். இந்த நாவலை படித்த திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி, நாவலை வைத்து அதிமுகவினரை கேலி செய்து வருகின்றார்.
அம்மையார் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்த தேர்தல்களம். காசுகொடுத்து மதியநேர கூட்டங்களுக்கு காலையிலேயே ஆட்களை கூட்டுவது அடிமைகளின் வழக்கம். அப்படி நடந்த பல கூட்டங்களில் வெயில் தாங்காமல் பலர் சுருண்டுவிழுந்து இறந்தனர். அத்துயர நிகழ்வுகளை நினைவுபடுத்தும் நாவலே ‘வாழ்க வாழ்க’.
தலைவியிடம் நற்பெயர் பெற அடிமைகளின் ஏற்பாட்டால் கூடிய அப்பாவி ஏழை-எளிய மக்களைப் பிணமாகத் தூக்கிச்செல்ல வைத்த கொடுமையை எழுத்தாளர் இமையம் அவர்களின் வார்த்தைகளில் படிக்கையில் அந்த உச்சி வெயிலின் வெப்பம் நமக்குள் இறங்குவது போன்ற உணர்வு. கால்கள்தான் மாறுகின்றன அடிமைகள் மாறுவதில்லை. என உதய் கூறியுள்ளார்.













