---Advertisement---

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை… தொடரும் அட்டூழியம்…!

By Sri
Published on: September 29, 2024
---Advertisement---

தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் அவர்களிடம் இருந்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தலைமன்னார் தனுஷ்கோடிக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அத்துமீரலில் ஈடுபட்டது.

மேலும் சிறைபிடித்த மீனவர்களை காங்கிரசின் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீனவர்கள் கைதான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போதும் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி அவர்களின் படகுகளையும் மீனவர்களையும் சேர்த்து இலங்கை கடற்படையினர் கைது செய்து செல்வது தொடர்கதையாகி வருகின்றது. மீனவர்கள் எவ்வளவோ போராடியும் இதற்கு மட்டும் ஒரு தீர்வு கிடைத்த பாடில்லை. இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் மீனவர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.