நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் திரு முக.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்கும்போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என தனது தாத்தா அப்பா பெயரை சேர்த்துக்கொண்டு தன் பெயரையும் சேர்த்து பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்கும்போது அவரது மனைவி துர்கா கண்களில் ஆனந்தக்கண்ணீர் வந்தது. சிறிது நிமிடம் அவர் கண்கலங்கியது பார்ப்போரை திமுக கழகத்தினரை உணர்ச்சிவசப்படவைத்தது.













