---Advertisement---

அஞ்சலி பாடல் மூலம் அஞ்சலி எஸ்.பி.பிக்கு விவேக் செய்த புகழாரம்

Published on: October 2, 2020
---Advertisement---

சமீபத்தில் பாடகர் எஸ்.பி.பி காலமானார்.கடந்த 1969ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் அறிமுகமானார். அவர் முதலில் பாடிய பாடல் ஆயிரம் நிலவே வா இரண்டாவதாக வந்தது சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளையகன்னி பாடலே முதலாவதாக தமிழில் ஒலித்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி என பல மொழிகளில் இவர் பாடி இருக்கிறார்.

இவரது பாடல்களுக்கு பாமரத்தனமான ரசிகர்கள் கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களில் திரைப்படத்துறையினரும் விதிவிலக்கல்ல மயில்சாமி, விவேக் போன்றவரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

சமீபத்தில் விவேக் தனது கீ போர்டில் அஞ்சலி அஞ்சலி பாடலை வாசித்து எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் விவேக்.

எந்த வார்த்தைகளாலும் அவரது வெற்றிடத்தை நிரப்ப முடியாது! அந்த வெற்றிடத்தை இசையால் மட்டுமே நிரப்ப முடியும்! ஏனென்றால் அவர் இசை !! என விவேக் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.