சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல ரோகிணி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கம் குறித்துத் திரைப்படத் துறை வட்டாரத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, திரையரங்கில் நேரடியாகக் கவுன்டரில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரவிருக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படத்திற்குத் திரையரங்கில் எந்தவிதமான நேரடி முன்பதிவும் இருக்காது என்று நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முற்றிலும் இணையதள வழியில மட்டுமே செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வமான ஆன்லைன் தளமான புக் மை ஷோ (www.bookmyshow.com) மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவுன்டர் முன்பதிவு இல்லாததால் கடைசி நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ரசிகர்கள் சிரமமின்றித் தங்களது இருக்கைகளை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் இதுபோன்ற டிஜிட்டல் முறைகள் தியேட்டர்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் புக்கிங் குறித்த கூடுதல் விவரங்களை ரசிகர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.













