தமிழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். மிகப்பெரும் அதிர்ச்சியை இந்த நிகழ்வு அளித்தது.
தேசிய அளவில் தமிழகம் இடம்பிடித்தது. இப்படியொரு துயர சம்பவம் நடந்து 30 வருடங்களுக்கு பின் மற்றொரு துயர சம்பவமாகத்தான் இந்த ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது.
தேசிய அளவிலான ஒரு தலைவர் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது தமிழகத்தில் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது.
ராஜீவ்காந்தியின் கோர படுகொலைக்கு பின்னர் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர் இவ்வாறு தமிழகத்தில் இறந்தது இது இரண்டாவது முறையாகும்.













