---Advertisement---

17 வழக்குகளையும் ஒன்னா சேர்த்து விசாரிங்க… சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Sri
Published on: August 8, 2024
---Advertisement---

பிரபல youtube சவுக்கு சங்கர் தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியிருந்தது .

வழக்கு விசாரணையின் போது ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அப்போது அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று காவல்துறை தரப்பு கோரிக்கை வைத்திருக்கின்றது.

இந்நிலையில் காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.