---Advertisement---

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு

Published on: January 20, 2021
---Advertisement---

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்து வருகிறார். இதில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற அவர் தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27 அன்று ரிலீஸ் ஆகிறார்.

அவரது வருகையை அரசியல் உலகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. காரணம் தற்போதுள்ளது போல் அல்லாமல் ஏதாவது அரசியல் மாற்றம் ஏற்படும் என அனைவரும் நினைத்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு திடீரென இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் மேல்சிகிச்சைக்காக  சசிகலாவை பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.