சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கோகுல்நாத் எஸ்டேட் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் திருமணம் முடிந்து 5 வருடமாகிறது அழகான குழந்தையோடு இனிமையாக சென்றது இவர்களது வாழ்க்கை. குடும்பத்தாரோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த கோகுல்நாத்தை சொந்த மைத்துனர் பாலமுருகன் சுத்தியலால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலமுருகன் அடிக்கடி கஞ்சா குடிப்பதை அறிந்த கோகுல்நாத் சொந்த மைத்துனர் தானே என கண்டித்துள்ளார். ஆனால் கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த பாலமுருகன் அக்கா கணவர் என்றும் பாராமல் சுத்தியலை எடுத்து தாக்கியதில் கோகுல்நாத் இறந்து விட்டார்.
இதனால் குடும்பத்தினரே பாலமுருகனை ஒரு ரூமிற்குள் அடைத்து வைத்து விட்டனர். பின்பு போலீஸ் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













