நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா பழையபடி தனது அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியிருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரோஹித் சர்மாவின் இந்த புதிய அவதாரத்தைப் பார்த்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, மற்ற ஐபிஎல் அணிகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரோஹித் இப்போது விளையாடும் விதம் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமையப்போகிறது என்பது தான் கும்ப்ளேயின் அந்த அதிரடி கமெண்ட்.
சமீபத்திய போட்டிகளில் ரோஹித் சர்மா களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு வருகிறார். பவர்பிளே ஓவர்களில் அவர் காட்டும் இந்த வேகம் மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இது குறித்துப் பேசிய அனில் கும்ப்ளே, “இப்போது நாம் பார்ப்பது ரோஹித் 2.0. கேப்டன்சி என்ற அந்தப் பெரிய பாரம் இப்போது அவர் தலையில் இல்லை. அதனால் எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் மிகச் சுதந்திரமாக அவர் பேட்டை சுழற்றுகிறார். இது தான் அவருக்குள்ளே இருந்த அந்த பழைய ஹிட்மேனை மீண்டும் வெளியே கொண்டு வந்துள்ளது” என்று புகழ்ந்துள்ளார்.
ரோஹித் சர்மாவுக்கு இப்போதுள்ள இந்த ஃபார்ம் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு நிச்சயம் ஒரு கவலையைத் தரும் (Worry) என்று கும்ப்ளே கூறியுள்ளார். ஒரு பேட்டராக ரோஹித் செட்டில் ஆகிவிட்டால் அவரை அவுட் செய்வது எவ்வளவு கடினம் என்பது எல்லா டீமுக்கும் தெரியும். அதிலும் இப்போது அவர் காட்டும் இந்த ‘பிளேஸிங் ரிட்டர்ன்’ (Blazing Return) பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. இந்த சீசனில் ரோஹித்தோட ஸ்டிரைக் ரேட் வழக்கத்தை விட மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் துடித்து வரும் நிலையில், ரோஹித் சர்மாவின் இந்த அபாரமான ஃபார்ம் அந்த அணிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. பவுலர்கள் எங்கு பந்து போட்டாலும் அதை லாவகமாக சிக்சருக்கு தூக்கும் அந்த பழைய ரோஹித்தைக் கண்டு ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். கும்ப்ளே சொன்னது போல இந்த ‘ரோஹித் 2.0’ சம்பவம் மற்ற டீம்களை இந்த சீசனில் ஒரு வழி பண்ணப்போவது மட்டும் உறுதி.













