தமிழ் திரையுலகில் நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் அவரது விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒரு குறிப்பிட்ட மூத்த நடிகையை நோக்கி ரவி மோகன் வீசியுள்ள குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் உலுக்கியெடுத்துள்ளது.
“நெறைய கேஸ் இருக்கு.. அந்த 3 எழுத்து இட்லி நடிகை அவங்களும் என்ன அட்டாக் பண்றாங்களாம்” என ரவி மோகன் இன்று ஆவேசமாகத் தனது புகாரைத் தொடங்கினார். திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு மூத்த நடிகையை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “அவங்க ஜெனெரேஷன் ஹீரோஸ் 3 பேரு என் குடும்பத்தையே கெடுக்க வந்தவனு அவங்கள சொன்னாங்க. இப்போ 3 பேரு வாழ்க்கையை கெடுக்க பாத்துட்டு, வெளியில் தங்களை ‘Feminist, Feminist’-னு சொல்லிட்டு என் லைஃபையும் கெடுக்குறாங்க” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
தங்களை பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், திரைமறைவில் தனது வாழ்க்கையையும், குடும்பத்தையும் சீரழிப்பதாக அவர் பகிரங்கமாகத் அக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சாதுவாக இருக்கும் தன்னைச் சுற்றி ஒரு திட்டமிட்ட சதிவலை பின்னப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தொடர் தாக்குதல்களால் தான் அடைந்த மன உளைச்சல்களையும் செய்தியாளர்கள் மத்தியில் கொட்டித் தீர்த்தார்.
இந்தத் தொடர் கொடுமைகளால் ஏற்பட்ட மிக மோசமான மன அழுத்தத்தால், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் (Self-harm) நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். “முன்னாள் மனைவியின் குடும்பத்தினர் கொடுத்த கடுமையான மன சித்திரவதையை என்னால் தாங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் இணையத்தில் பரப்பப்பட்ட வதந்திகள் மற்றும் சைபர் புல்லிங் (Cyberbullying) கொடுமை காரணமாக என் நல்ல தோழியான கெனிஷாவையும் நான் இழக்க நேரிட்டது” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் ரவி மோகன் அந்த ‘3 எழுத்து இட்லி நடிகை’ மற்றும் ‘பெண்ணியவாதிகள்’ குறித்து வெளியிட்டுள்ள இந்த அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அவர் குறிப்பிடும் அந்த ‘3 எழுத்து நடிகை’ யார், அந்த ‘இட்லி நடிகை’ என்கிற வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் தற்போதே விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.













