தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) ஆகியோரது திருமணம் பிப்ரவரி 26, 2026 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் (Udaipur) நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக இவர்களது உறவு குறித்துப் பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் மிகவும் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டது.
View this post on Instagram
திருமண நிகழ்வுகள் குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், விஜய் தேவரகொண்டாவை “எனது கணவர்” (My Husband) என உருக்கமாக அறிமுகப்படுத்தியுள்ளார். உண்மையான அன்பு மற்றும் அமைதி என்றால் என்ன என்பதைத் தனக்குக் கற்பித்தவர் அவர்தான் என்றும், தனது வளர்ச்சிக்கு அவரே முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், விஜய் தேவரகொண்டாவும், தனது சிறந்த நண்பரையே மனைவியாக ஏற்றுக்கொண்டது குறித்து நெகிழ்ச்சியான குறிப்பு ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணத்திற்குத் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
One day, I missed her.
Missed her in a way that made me feel like my day would’ve been better if she were around.
Like my meals would’ve felt more wholesome if she were sitting across from me.
Like my workouts would’ve been more fun and less of a punishment if she were doing… pic.twitter.com/fy7umfHWjN— Vijay Deverakonda (@TheDeverakonda) February 26, 2026
உதய்பூரில் உள்ள ஐடிசி மெமெண்டோஸ் (ITC Mementos) விடுதியில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் இரண்டு விதமான கலாச்சாரச் சடங்குகள் பின்பற்றப்பட்டன. பிப்ரவரி 26 காலை 10:10 மணியளவில் தெலுங்கு முறைப்படியான (Telugu Traditions) திருமணச் சடங்குகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் ராஷ்மிகாவின் பூர்வீக கலாச்சாரமான குடகு (Kodava) முறைப்படி திருமண நிகழ்வுகள் அரங்கேறின. முன்னதாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மெஹந்தி, ஹல்தி மற்றும் சங்கீத் போன்ற கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
சினிமா மார்க்கெட் (Market) மற்றும் பிஸினஸ் (Business) ரீதியாகப் பார்க்கையில், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தென்னிந்தியத் திரைத்துறையின் அதிக வணிக மதிப்பு கொண்ட நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ (Geetha Govindam) மற்றும் ‘டியர் காம்ரேட்’ (Dear Comrade) ஆகிய படங்கள் பெரும் வசூல் (Collection) ஈட்டியவை. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ (Ranabaali) திரைப்படம் வரும் செப்டம்பர் 11 அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது திருமணத்திற்குப் பின் இணையும் இவர்களது முதல் பிஸினஸ் புராஜெக்ட் என்பதால் வர்த்தக ரீதியாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருமணத்தை முன்னிட்டு விடுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் இவர்களை “வைரோஷ்” (VIROSH) என்று அழைத்து வந்த நிலையில், திருமண அறிவிப்பிலும் அதே பெயரையே இருவரும் பயன்படுத்தியுள்ளனர். உதய்பூரில் நடைபெற்ற இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா (Taj Krishna) ஹோட்டலில் திரைத்துறையினருக்காகப் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Hi my loves,
Introducing to you now “My Husband”! 💘
Mr. Vijay Deverakonda!! ❤️
The man who taught me what true love feels like,
The man who showed me what being in peace feels like! 🤍
The man who told me everyday that dreaming big was absolutely ok and constantly telling… pic.twitter.com/MPrsGfNTwb— Rashmika Mandanna (@iamRashmika) February 26, 2026
திரையுலகில் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகத் தனிப்பட்ட முத்திரையைப் பதித்துள்ள இந்த ஜோடி, தற்போது தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். உதய்பூரின் பாரம்பரியப் பின்னணியில் நடந்த இந்தத் திருமணம், கலாச்சார விழுமியங்களை மதிக்கும் விதமாக அமைந்திருந்தது. இனி வரும் காலங்களில் இவர்களது திரைப்பயணம் மற்றும் புதியத் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் மார்க்கெட் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.













