தந்தி டிவியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரங்கராஜ் பாண்டே அவர்கள். சில வருடங்களாக அவர் அதில் இருந்து விலகி சாணக்யா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றார். இந்த சேனலுக்கும் பார்வையாளர்கள் அதிகம்.
இந்த நிலையில் விஷமிகள் யாரோ நேற்று இந்த சேனலை முடக்கி இருந்தனர். இது குறித்து நிர்வாகம் கவலையில் இருந்தது.
இந்த நிலையில் சேனல் முடக்கப்பட்டு 24 மணி நேரத்தில் அதை மீட்டுவிட்டதாக அதன் நிறுவனர் திரு ரங்கராஜ் பாண்டே டுவிட் செய்துள்ளார்.













