கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போதைய சட்டசபை தேர்தலிலும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கடந்த ஆட்சியின் போது இவர் காரசாரசாரமாக பேசி பேட்டி கொடுத்திருந்தார். முக்கியமாக திமுக தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலினை கடுமையாக எதித்து பேட்டி கொடுத்திருந்த நிலையில் தற்போது அவர் கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
சில நேரங்களில் பக்குவமின்றி தடித்த வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.













