கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி கடந்த 1 மாத காலமாக உடல்நிலை நலிவுற்று உள்ளார். சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியான நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது எஸ்.பி.பியின் உடல்நிலையை பார்க்க அவரது மகன் எஸ்.பி.பி சரண், எஸ்.பி.பி மனைவி சாவித்திரி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர்.
அங்கு பிரபலங்கள் ரசிகர்கள் குவிவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
50 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.







