---Advertisement---

ஒரு சுக்குகாபியை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாந்த ’குடி’மகன்கள்! நூதனாமாக ஏமாற்றிய இளைஞர்கள்!

By Sri
Published on: April 4, 2020
---Advertisement---

விருதுநகரில் சரக்கு என சொல்லி சுக்கு காபியை 300 ரூபாய்க்கு விற்றுள்ளது ஒரு கும்பல்.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.

இந்நிலையில் அதற்குள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அத்திமீறி நுழைந்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் குடி நோயாளிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கேரளாவில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருக்கிறது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக தினமும் 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் அது பொய் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் பிளாக்கிலாவது சரக்கு வாங்கிக் குடிக்க வேண்டும் என ஆங்காங்கே மது அடிமைகள் தவித்து வருகின்றனர். இவர்களின் ஆசையைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றும் வேலைகளும் சிறப்பாக நடந்து வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை இதுபோல மது வாங்குவதற்காக ஒரு கும்பல் காத்திருந்துள்ளது. அப்போது அங்கே வந்த இரு இளைஞர்கள் அங்கிருந்தவர்களிடம் தங்களிடம் மது உள்ளதாகக் கூற, அதை நம்பிய அவர்கள் 300 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் செல்ல இவர்கள் சரக்கைக் குடிக்கலாம் என திறந்தபோது பாட்டிலில் இருந்தது சரக்கு அல்ல சுக்குக்காபி எனக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Soori's intense look in the new poster of Mandaadi movie released on Tamil New Year.

Soori Mandaadi Poster : “கடல் வேட்டைக்கு ரெடியான சூரி” – தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியான ‘மண்டாடி’ போஸ்டர்; 25 கோடிக்கு விலை போன ஓடிடி உரிமை!

Actress Radikaa Sarathkumar and Director Gopi Nainar's new movie Colony motion poster launch by Vijay Sethupathi.

Gopi Nainar Colony : “அறம் இயக்குனரின் அடுத்த அதிரடி” – ‘தாய் கிழவி’ வெற்றிக்குப் பின் ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘காலனி’; விஜய் சேதுபதி வெளியிட்ட மிரட்டலான மோஷன் போஸ்டர்!

Television actress Alya Manasa sharing a motivational life quote about facing hard days on Instagram.

Alya Manasa Motivation : “பாறைகள் இல்லையென்றால் சத்தம் இல்லை” – கஷ்டமான நாட்களை கடப்பது எப்படி? ஆல்யா மானசா கொடுத்த வைரல் அட்வைஸ்!

Actor Arya during the toughest underwater action sequence shoot for his movie Mr. X.

Arya Mr X : “மிஷன் இம்பாசிபிள் தான் போங்க” – 20 அடி ஆழத்தில் நடுங்கும் குளிரில் ஆர்யா செய்த சாகசம்; மிஸ்டர் எக்ஸ் ஷூட்டிங் ஸ்பாட் ரகசியம்!

Director H. Vinoth and actor Karthi planning for the sequel of Theeran Adhigaaram Ondru.

H Vinoth Next : “தீரன் இஸ் பேக்” – கார்த்தியுடன் மீண்டும் இணையும் எச் வினோத்; சூர்யா, தனுஷ் படங்கள் என்னாச்சு? ஷாக்கிங் அப்டேட்!

Music composer Sai Abhyankkar officially announced as the music director for AGS Entertainment's next production.

Sai Abhyankkar AGS : “இனி மியூசிக்ல அதிரடி தான்” – ஏஜிஎஸ் குடும்பத்தில் இணைந்த இசை சென்சேஷன் சாய் அபயங்கர்; அர்ச்சனா கல்பாத்தி மாஸ் அப்டேட்!