மும்பை அருகே உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன் பார்வையற்ற ஒரு தாயின் குழந்தை ஒன்று ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையில் இருந்து தவறி விழுந்து விட்டது. தூரத்தில் ஒரு ரயில் வந்த நிலையில் அங்கு வேலை செய்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே பாய்ந்து வந்து அந்த குழந்தையை காப்பாற்றினார். பலரும் அந்த ரயில்வே ஊழியரை பாராட்டிய நிலையில் அவருக்கு இந்திய ரயில்வே சார்பிலும் பாராட்டு விழா நடந்தது.
இந்நிலையில் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசுப்பணம் வழங்கி கெளரவித்துள்ளது இந்தியன் ரயில்வே.













