திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தோஷம் போக்குவதற்கு திருப்பதி கோவிலில் கொடுமணக்கு விழா ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயார் செய்யப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை இருந்தது. அதிலும் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவைகளில் கலந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவே வெளியிட்டதால் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தரமற்ற நிலையில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனித தன்மையை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்கள். மேலும் திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் நாடுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
அப்போது திருப்பதியில் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து ஏழுமலையான் கோவிலுக்கு தோஷத்தை போக்க சம்ரோஜனம் செய்வதற்கு நிர்வாகம் ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.
விலங்கு கொழுப்பு கலந்த நெயில் லட்டு தயாரித்ததால் கோயிலுக்கு மிகப்பெரிய பாவமும் தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சம்பரோஜனம் என்றால் குடமுழுக்கு செய்து கோவிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு எனக் கூறப்பட்டுள்ளது. விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.













