---Advertisement---

Stone Bench 18 Update: “தென்னிந்தியாவின் 2 ஆல்பா டீம்கள் ஒன்னு சேர்ந்தாச்சு!” – கார்த்திக் சுப்புராஜ் – ராணா தக்குபாட்டி இணையும் பிரம்மாண்ட படம்.. நாளை ஃபர்ஸ்ட் லுக்!

Published on: March 15, 2026
Official announcement poster of Stone Bench 18 featuring Karthik Subbaraj and Rana Daggubati's production collaboration.
---Advertisement---

தென்னிந்தியத் திரையுலகில் ஒரு மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு கூட்டணி இன்று, மார்ச் 15, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் ‘கேங்ஸ்டர்’ படங்களுக்குப் பெயர் போன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subbaraj) ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ (Stone Bench Films) மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமும் தயாரிப்பாளருமான ராணா தக்குபாட்டியின் (Rana Daggubati) ‘ஸ்பிரிட் மீடியா’ (Spirit Media) ஆகிய இரண்டு ‘ஆல்பா’ குழுக்களும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்கவுள்ளன.

StoneBench18 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு ஒரு குறியீட்டு போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு துப்பாக்கியின் படமும், “And the wedding happens right in the middle of a war…” (யுத்தத்தின் நடுவிலேயே அந்தத் திருமணம் நடைபெறுகிறது) என்ற கவித்துவமான வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் டிராமா அல்லது கார்த்திக் சுப்புராஜ் பாணி டார்க் காமெடி படமாக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

நாளை மதியம் 12:12-க்கு மெகா அப்டேட்!

இன்று கூட்டணிக் குறித்து அறிவித்த படக்குழு, படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் நாளை, மார்ச் 16-ம் தேதி மதியம் 12:12 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாக இருப்பதால், இரண்டு மாநில ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Stone Bench (@stonebenchers)

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராணா தக்குபாட்டி இருவருமே தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள். கார்த்திக் சுப்புராஜ் தனது படங்களில் ‘ரெட்ரோ’ ஸ்டைலையும் கேங்ஸ்டர் வாழ்வியலையும் கையாளுவார். அதேபோல், ராணா பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமான கதைகளைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர்கள் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பது தான் தற்போதைய மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

யார் அந்த ஹீரோ?

சமூக வலைதளங்களில் இந்தப் படத்தில் சூர்யா அல்லது விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், இது அந்தப் படமாக இருக்குமா அல்லது ஒரு புதிய கூட்டணியா என்பது நாளை தெரிந்துவிடும்.

தமிழகம் மற்றும் ஆந்திரா/தெலுங்கானா என இரண்டு சந்தைகளையும் குறிவைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதால், இந்தியத் திரையுலகின் கவனத்தை இந்தப் புராஜெக்ட் ஈர்த்துள்ளது. நாளை மதியம் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் இதற்கான அனைத்து விடைகளையும் தரும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.