---Advertisement---

தூய்மைப்பணியாளர் ஒருவரை நன்றி தெரிவித்து பாராட்டிய அமைச்சர் வேலுமணி

Published on: October 1, 2020
---Advertisement---

இவ்வுலகில் தீயவை மட்டுமே அதிகமாக இருப்பதாக நாம் நினைத்து கொள்கிறோம். ஆனால் நல்லவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை உணர்வதில்லை மனிதாபிமானமும் ஒழுக்கமும் அழிந்து போகவில்லை என்பதற்கு உதாரணமாக பூமியில் எத்தனையோ சம்பவங்கள் இப்பூமியில் நடந்தாலும் நாகை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் ஒரு பெண் செய்த நல்ல காரியத்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியே ஸ்பெஷலாக அந்த பெண்ணை பாராட்டியுள்ளார்.

அந்த பெண் செய்த செயல் என்னவென்று அமைச்சரின் இந்த வாழ்த்துக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாகை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளோடு, தவறுதலாக குப்பைக்கு வந்த வெள்ளி கிரீடத்தை மனதில் சஞ்சலமின்றி, நேர்மையாக கோவில் நிர்வாகத்திற்கே திருப்பி அளித்த தூய்மை பணியாளர் திருமதி சித்ரா அவர்களுக்கு என் பாராட்டுகள்.

இதுதான் அந்த பெண் செய்த நற்செயலாகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.