இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளை மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது இடங்களிலும், அலுவலகங்களிலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது என்றும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் என்று பல்வேறு அதிரடி நிபந்தனைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, தமிழகத்தில், ‘சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது என்றும், மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் மாஸ்க் அணியாமல் தெருவில் நடந்தால் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும், முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், முகக்கவசம் இல்லாதுப்பட்சத்தில், கைக்குட்டை, துப்பட்டா, துண்டு ஆகியவற்றை முகக்கவசமாகப் பயன்படுத்ததலாம் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணிவது கட்டாயம் என பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக்கி வருகின்றனர்.







