தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாகவும், பான்-இந்தியா ஸ்டாராகவும் ஜொலித்து வரும் நடிகர் தனுஷின் மார்க்கெட் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக அவர் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, தனுஷின் வணிக ரீதியான மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அவர் இயக்கி நடிக்கும் படங்கள் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள் என அவரது கால்ஷீட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முழுமையாக நிரம்பியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) நிறுவனத்துடன் தனுஷ் மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த ‘கர’ (#Kara) திரைப்படத்திற்காக அவருக்கு சுமார் 35 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது அந்த ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய மல்டி-புராஜெக்ட் டீலாக (Multi-Project Deal) மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வேல்ஸ் நிறுவனத்திற்காகத் தனுஷ் மொத்தம் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த 3 பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தனுஷின் சம்பளம் ஒரு படத்திற்குச் சுமார் 58 கோடி ரூபாய் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த மூன்று படங்களுக்காக தனுஷ் சுமார் 174 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்ட உள்ளார்.

இந்தத் திட்டமிட்ட நகர்வின் மூலம், தனுஷின் சம்பளம் ஒரு படத்திற்கு சுமார் 23 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனுஷை போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை நீண்ட கால அடிப்படையில் தங்களது நிறுவனத்துடன் இணைத்துக்கொள்வதற்காக இந்த மெகா டீலை உருவாக்கியுள்ளார். முன்னதாக இதே போன்ற ஒப்பந்தங்கள் கோலிவுட்டின் மற்ற பெரிய நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘கர’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பள உயர்வு குறித்த தகவல் கோலிவுட் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தனுஷ் தற்போது ‘கர’ படத்தின் வெளியீட்டில் மிகவும் ஏதிர்ப்பார்புகளுடன் காத்து கொண்டு உள்ளார். இது தவிர இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என அவரது கைவசம் பல பிரம்மாண்ட படைப்புகள் உள்ளன. இத்தனை பிஸியான சூழலிலும், வேல்ஸ் நிறுவனத்திற்காக மூன்று படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பது, அந்த நிறுவனத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ‘கர’ படத்தை தொடர்ந்து மற்ற இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தம் தனுஷின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான பொருளாதார மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அசுரன், வடசென்னை போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு தனுஷின் ஒவ்வொரு அசைவும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













