---Advertisement---

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

By Sri
Published on: April 30, 2020
Corona status in TN and india
---Advertisement---

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக  33,610 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில், தமிழ்நாட்டில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323ஆக அதிகரித்துள்ளது. இந்த 161 பேரில் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. அங்கு கொரோனா எண்ணிக்கை 900 ஐ நெருங்கியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.